என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
- நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.
- 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
திருப்பூர்
திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனாலும் மதிய நேரத்தில் வெயிலின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.
இதனால் நேற்று காலை மற்றும் மதிய நேரங்களில் திருப்பூர், சிறுபூலுவபட்டி, 15 வேலம்பாளையம், பெரியார்காலனி உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






