search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    வெள்ளகோவிலில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை துணைத் தலைவர் ரவி தலைமையில் இணைச் செயலாளர் சக்திவேல் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இனைச்செயலாளர் ராணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×