search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் இன்று இரவு மின்தடை
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் இன்று இரவு மின்தடை

    • ஆலாங்காடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் குமரன் சாலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆலாங்காடு மின் பாதையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை வளர்மதி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, புதுமார்க்கெட் வீதி, காமராஜ் ரோடு, குள்ளிச்செட்டியார் வீதி, சிக்கன செட்டியார் வீதி, விட்டல்தாஸ் சேட்டு வீதி, துளசிராவ் வீதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×