search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் - பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பல்லடம் - பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    பலல்டம் :

    பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 3-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம்.

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம், கணக்கம்பாளையம் மின் அழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் தடைபடும் பகுதிகள்: ரோஜா காா்டன், பொடாரம்பாளையம், செந்தில் நகா், பாலாஜி நகா், தாண்டாகவுண்டன் புதூா், அம்மாள் நகா், காளிபாளையம் ஆதிதிராவிடா் காலனி.

    Next Story
    ×