search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூர், கன்னிவாடி, கிளுவன்காட்டூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    மூலனூர், கன்னிவாடி, கிளுவன்காட்டூர் பகுதியில் நாளை மின்தடை

    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (பொறுப்பு) பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.அப்போது மின் பாதைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் டி.கோபால்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மூலனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, நொச்சிக்காட்டு வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணை மின்நிலையங்களுக்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்டஉப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம். துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், காளிபாளையம். மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் சாலக்கடை, எலுகாம்வலசு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×