search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு ரெயில் நாளை கரூர் வரை மட்டும் இயக்கம்
    X

    கோப்புபடம்.

    பாலக்காடு ரெயில் நாளை கரூர் வரை மட்டும் இயக்கம்

    • பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும்.

    திருப்பூர் :

    பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காடு-திருச்சி ரெயில் (எண்.16844) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் திருச்சி-பாலக்காடு ரெயில் (எண்.16843) நாளை தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×