என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
உடுமலை அமராவதி அணையில் இருந்து மேலும் 5 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு
- நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
- வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மேலும் 5 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், நாளை 10ந் தேதி முதல், 15-ந் தேதி வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
Next Story






