என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே விபத்தில் மூதாட்டி பலி
- நேற்று மதியம் வண்ணான்துறை புதூர் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்.
- தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சிவாத்தாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே பொங்கலூர் ரங்கபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மனைவி சிவாத்தாள் (வயது 65). இவர் நேற்று மதியம் வண்ணான்துறை புதூர் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சிவாத்தாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story






