என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூரில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை - லேப் டெக்னீசியன் போக்சோவில் கைது
- இரண்டு மாதங்களாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
- மணிகண்டபிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
கரூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பயிற்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
அப்போது அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் வால்பாறையை சேர்ந்த மணிகண்டபிரபு (21) என்பவர் நர்சிங் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து லேப் டெக்னீசியன் மணிகண்டபிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story






