search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் கைப்பந்து போட்டி
    X

    உடுமலையில் கைப்பந்து போட்டி நடைபெற்ற காட்சி. 

    உடுமலையில் கைப்பந்து போட்டி

    • உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
    • உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ரேணுகாதேவி பிறந்தநாளை முன்னிட்டு தன்னம்பிக்கை வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் நினைவாக மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி உதவியுடன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இரவு பகல் போட்டிகளாக நடக்கிறது. இதில் எஸ்டிஏடி. எக்ஸ்எல்என்சி கல்லூரி, ஜேபிஆர். கல்லூரி ,பாரதியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, பி .ஆர் .கே .கல்லூரி, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆகிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.

    இரண்டாம் நாள் போட்டியில் சென்னை ஜே .பி .ஆர் .கல்லூரி, பாரதியார் கல்லூரி ஆகியவை கலந்து கொண்டு விளையாடின. இதில் அதிக புள்ளிகளை பெற்று ஜே. பி .ஆர் .கல்லூரி வெற்றி பெற்றது. இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜேபிஆர். கல்லூரி மாணவி ஆதர்யராய்க்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்எஸ். செல்வராஜ் ,உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×