search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் லாரிகள் மோதி விபத்து
    X
    விபத்துக்குள்ளான லாரிகளை படத்தில் காணலாம். 

    பல்லடத்தில் லாரிகள் மோதி விபத்து

    • லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.
    • விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது பனப்பாளையம் பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த லாரி மேற்கிலிருந்து கிழக்காகச் செல்ல முற்பட்டது. எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் காயம் அடைந்த பிளாஸ்டிக் லோடு லாரியின் ஓட்டுனர் மனோகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வழித்தடத்தில் பாதிப்ப டைந்த போக்குவரத்தையும் சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    Next Story
    ×