search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை
    X

    கோப்புபடம். 

    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    • கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
    • சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3- ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவா்கள் இணையதள முகவரியில் சென்று ஆதாா் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும்.இதில் ஏதாவது இடா்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதாா் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421- 2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×