search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மூத்தோர்களுக்கான தடகள போட்டிகள்
    X

    மூத்தோர் விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருப்பூரில் மூத்தோர்களுக்கான தடகள போட்டிகள்

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.
    • மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 13&வது ஆண்டு மூத்தோர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ ஓட்ட போட்டிகள், 5 கி.மீ. நடை போட்டி மற்றும் 80, 100, 110, 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித்தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நேற்று திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சுப்பிரமணியம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை செயலாளர் ராமசாமி, திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×