என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு வணிகர்களுக்கு பதிவு சான்று வழங்கும் முகாம் நடைபெற்ற காட்சி.
பல்லடத்தில் உணவு வணிகர்களுக்கு பதிவு சான்று வழங்கும் முகாம்
- உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது
- மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்லடம் நகராட்சி மற்றும் பல்லடம் வட்டார பகுதிகளில் உணவு வியாபாரம் செய்யக்கூடிய மளிகை கடை உரிமையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், ஓட்டல் ,பேக்கரி, மெஸ், மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
Next Story






