search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் உடனடியாக சீரமைப்பு - வெள்ளகோவில் நகராட்சி சார்பில் கலெக்டருக்கு பாராட்டு
    X

    கோப்புபடம். 

    குடிநீர் குழாய் உடனடியாக சீரமைப்பு - வெள்ளகோவில் நகராட்சி சார்பில் கலெக்டருக்கு பாராட்டு

    • வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது,
    • வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது, இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்போது குடிநீர் குழாய் இணைப்பை சாலையோரத்தில் மாற்றி அைமக்கப்பட்டது. பின்னர் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பணி மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டதால், நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதற்காக வெள்ளகோவில் நகராட்சியின் தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோர் திருப்பூர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×