search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச ஆடுகள் பலி - கால்நடைத்துறையினர்  ஆய்வு
    X

    கோப்புபடம். 

    இலவச ஆடுகள் பலி - கால்நடைத்துறையினர் ஆய்வு

    • ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.
    • இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கு தலா, 3,500 ரூபாய் பெறுமானமுள்ள 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.

    அவிநாசி ஒன்றிய பகுதியில் சின்னேரிபாளையம், நடுவச்சேரி, புலிப்பார், தண்டுக்காரன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகளில் சில அடுத்தடுத்து இறந்தன. இறப்புக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வரும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பயனாளிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தருவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கேற்ப பயனாளிகளின் விவரங்கள் இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    Next Story
    ×