search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10,12-ம்வகுப்பு துணைத்தேர்வு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    10,12-ம்வகுப்பு துணைத்தேர்வு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

    • வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம்.
    • தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை:

    கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி பிளஸ் 2 துணைத்தேர்வு வருகிற 25 -ந்ேததி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வு, ஆகஸ்டு 2ந்தேதி முதல் 10-ந் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலரும் ஆர்வமுடன் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள் வரும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.

    Next Story
    ×