என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே சிலிண்டர் வாகனத்தில் தீ விபத்து
    X

    தீப்பிடித்து சேதமடைந்த சிலிண்டர் வாகனம்.

    உடுமலை அருகே சிலிண்டர் வாகனத்தில் தீ விபத்து

    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார்.
    • சிலிண்டர்களை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களால் உடனடியாக இறக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து ஆலம்பாளையம் கிராமத்திற்கு எரிவாயு சிலிண்டர்களுடன் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜினீல் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதனை பார்த்த டிரைவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார்.ஆனால் முடியவில்லை.

    உடனே இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிலிண்டர் வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வாகனத்தில் தீ பற்றிய உடன் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களால் உடனடியாக இறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அமராவதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×