என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே தேங்காய் உடைக்கும் போராட்டம்
    X

    தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    பல்லடம் அருகே தேங்காய் உடைக்கும் போராட்டம்

    • பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும்.

    பல்லடம்:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று 8-வது நாளாக கொடுவாயில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    அப்போது கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும். பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கோகுல் ரவி தலைமை தாங்கினார். கொடுவாய் நகர தலைவர் தமிழரசு, ஓடக்கல்பாளையம் ஈஸ்வரமூர்த்தி, கொடுவாய் நகரச் செயலாளர் லோகநாதன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க சார்பில் வேலன்தங்கவேல், கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, காங்கேயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, பொங்கலூர் ஒன்றிய பொருளாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×