search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    கையெழுத்து இயக்கம் நடைபெற்றக் காட்சி.

    கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

    • பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
    • மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,

    ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பெரியக்கடை வீதி பள்ளிவாசலில் ம.தி.மு.க. 44-வது வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பகுதி செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லட்டு நாசர், சைபுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×