என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை தாங்கினார்.
- மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊத்துக்குளி:
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளைகள் சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை தாங்கினார்.
தாலுகா கமிட்டி உறுப்பினரும், ஆர்.எஸ். கிளைச் செயலாளருமான கே.ஏ.சிவசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் கே.பாலமுரளி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உள்பட கட்சி உறுப்பினர்கள், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story






