search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமசிவம்பாளையத்தில் கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பரமசிவம்பாளையத்தில் கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம்

    • முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
    • முகாமில் சுமார் 120 பசுக்கள், 250 ஆடுகள்,25 நாய்கள், 200 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    மேலும் இந்த முகாமிற்கு கால்நடைபராமரிப்பு துறை திருப்பூர் சரக உதவி இயக்குனர் பரிமள்ராஜ்குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்முருகன், அர்ச்சுனன், கால்நடை ஆய்வாளர் சுதாபிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழுநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் மற்றும் சினை பரிசோதனை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது .இம்முகாமில் சுமார் 120 பசுக்கள், 250 ஆடுகள்,25 நாய்கள், 200 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இறுதியாக கால்நடைகளை தாக்கும் நோய்கள் , அதன் தடுப்பு முறைகள் குறித்து உதவி இயக்குனர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சிறந்த கிடாரி க்கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×