என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கநாயக்கன்பாளையம் மின் பகிர்மான பகுதியில் ஜனவரி மாத மின் கட்டணத்தை செலுத்தலாம் - அதிகாரி தகவல்
    X

    கோப்புபடம்.

    கெங்கநாயக்கன்பாளையம் மின் பகிர்மான பகுதியில் ஜனவரி மாத மின் கட்டணத்தை செலுத்தலாம் - அதிகாரி தகவல்

    • பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
    • மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.

    பல்லடம் :

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சாரவாரிய கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த (மார்ச்) மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த கெங்கநாயக்கன்பாளையம் பகிர்மானம் மின் நுகர்வோர்கள் கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்தலாம். மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×