search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு பருவமழை தீவிரம் - குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    கோப்புபடம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் - குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது.
    • குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது.

    உடுமலை :

    தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மழை திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் மீண்டும் நிறைவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பயன்படும். உள்ளாட்சிகளின் குடிநீர் வினியோகத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாத நிலையையும் பாசன நீராதாரத்திற்கு குறையில்லாத சூழலையும் உருவாக்கும்.

    ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை சராசரியைக் காட்டிலும் மாவட்டத்தில் அதிக அளவில் பெய்துள்ளது. இதனால்கடந்த கோடைக்காலத்தை குடிநீர்த்தட்டுப்பாடு இன்றி கடக்க முடிந்தது. நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள பல்வேறு குளம், குட்டைகள், மழை காரணமாக, நீர் நிரம்பியிருந்தது. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது. சமீப காலமாக மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள், அரசுடன் இணைந்து நீர்நிலைப்பராமரிப்பில் அக்கறை காட்டி வருகிறது. சிறிய மாற்றம் என்றாலும்கூட, அது பெரிய பயனை அளித்திருக்கிறது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதும் திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக பயன்களை அளிக்கிறது.குறிப்பாக, பில்லூர், பி.ஏ.பி., அணைகள் நிறைந்தால் திருப்பூர் மாவட்டத்திற்குத் தடையற்ற குடிநீர் ஆதாரத்துக்கும், பாசன நீராதாரத்திற்கும் வழிவகுக்கிறது.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். பவானியாற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம்அணைக்கு திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.இது திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மழைக்காலத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்ட வேண்டும். வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்புகளைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். சிறுதுளி பெருவெள்ளம்என்பதை உணர்த்த வேண்டும். மழைநீரை வீணாக்காமல் பயன்படுத்துவது அவசியமானது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.நிலத்தடி நீர் உயர்வதன் மூலம், பாசனத்திற்கும், குடிநீருக்கும், பிற உபயோகங்களுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

    Next Story
    ×