என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்மீட்டர் எரிப்பு சம்பவத்தில் விசாரணை தீவிரம்
- தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி நடைபெற்றது.
- மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூரில் தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான கோவை தெற்கு மின்பகிர்மான வட்ட மின் அளவீடு ஆய்வக செயற்பொறியாளர் சிவக்குமார் திருப்பூர் குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். புகார் தெரிவிக்கப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன், விசாரணை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். முன்னதாக மின்மீட்டர் எரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு விசாரணை அதிகாரி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்