search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அமராவதியில் மர்ம நபர்களால் அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்
    X

    கோப்புபடம்

    உடுமலை அமராவதியில் மர்ம நபர்களால் அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

    • அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
    • அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி உள்ளது. இந்தப்பகுதியில் ஆண்டியகவுண்டனூர், உரல்பட்டி, கிழுவன்காட்டூர், குட்டிய கவுண்டனூர், பெரிசனம்பட்டி ஜக்கம்பாளையம்,அமராவதி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.நிர்வாக வசதிக்கு ஏதுவாக இரண்டு ஒன்றிய குழு உறுப்பினர்களும் உரல்பட்டி, அமராவதி பகுதியில் தலா ஒரு ஊராட்சிமன்ற அலுவலகமும் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று பொதுமக்கள் நாள்தோறும் சேவைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த சூழலில் அமராவதியில் கட்டப்பட்டு உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக தங்கி உள்ளனர்.அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எதற்காக அரசு அலுவலகத்தில் தங்கி உள்ளனர் என்பது தெரியவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி சார்பில் அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று நாள்தோறும் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம்.இந்த சூழலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர்.அவர்கள் எதற்காக அங்கு தங்கி உள்ளனர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை.

    இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் தற்போதைய சூழலில் அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது குறித்து அமராவதி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள நபர்கள் மீதும், அவர்களை அங்கே தங்க வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×