search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர்- ஊத்துக்குளி பகுதியில் பலத்த மழை
    X
     சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடிய காட்சி.

    பெருமாநல்லூர்- ஊத்துக்குளி பகுதியில் பலத்த மழை

    • 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது
    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், கணக்கம் பாளையம், பூலுவபட்டி, மலையம்பாளையம், தொரவலூர், செங்கப்பள்ளி, குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. காலை முதல் வெயில் லேசாக அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் கரு மேகம் இருள தொடங்கியது. பின்னர் மாலை 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது. காற்றும் பலமாக வீசியது. அத்துடன் மழை விடாமல் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் 2 மணி பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட் அருகில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் நிரம்பி ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே உள்ள பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கினர். வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. இந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இந்த மழை காலங்களில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×