என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
பெருமாநல்லூர்-செங்கப்பள்ளி பகுதியில் பலத்த மழை
- தேசிய நெடுஞ்சாலையின் பாலத்திற்கு அடியில் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழைக்கு ஒதுங்கி இருந்தனர்.
- மழை காலங்களில் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதேபோல் நேற்று (வெள்ளிக்கிழமை ) பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளிலும் மாலை 4 மணி அளவில் இருந்து தொடர் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெருமாநல்லூரில் இருந்து செங்கப்பள்ளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பாலத்திற்கு அடியில் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழைக்கு ஒதுங்கி இருந்தனர். பள்ளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையினால் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை காலங்களில் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று பெருமாநல்லூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story






