search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரி ஆசிரியர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
    X

    கோப்புபடம்.

    அரசு கல்லூரி ஆசிரியர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

    • அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
    • 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:- அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். அதற்கான காரணங்கள் ஏதும் தெளிவாக கூறவில்லை. கருவூலத்துறையில் இதற்கான பிரத்யேக படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த கல்லூரி முதல்வர்கள், மண்டல கல்லரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது. அதன் பின் இவ்விபரங்கள் கேட்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×