என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்காச்சோள கதிர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மக்காச்சோள கதிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
- தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்
- போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே, அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
நேற்றைய போராட்டத்தில், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மக்காச்சோளக் கதிர்களை விவசாயிகள் கையில் ஏந்திய படி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பெருந்தொழுவு பாசன சபை தலைவர் தமிழ்நாடு பாலு, பெருந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நாச்சிபாளையம் பாசன சபை தலைவர் குப்புசாமி, பாசன சபை உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் குருசாமி, சுப்பிரமணியம், முத்துராமலிங்கம், தெய்வசிகாமணி கிருஷ்ணசாமி, மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






