search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்புபடம்

    உடுமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆா்ப்பாட்டத்தில் சா்க்கரை ஆலையை முழுமையாக புனரமைக்க வேண்டும்.
    • ஆலைக்கு வழங்கப்படும் கரும்புகளுக்கு 15 நாள்களில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

    உடுமலை,ஜூன்.23-

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆலையின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.எம். வீரப்பன் தலைமை வகித்தாா்.

    ஆா்ப்பாட்டத்தில் சா்க்கரை ஆலையை முழுமையாக புனரமைக்க வேண்டும். 1 டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். ஆலைக்கு வழங்கப்படும் கரும்புகளுக்கு 15 நாள்களில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். பயிா்க் கடன்கள் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாதந்தோறும் பிடிக்கப்படும் வைப்பு நிதியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், நிா்வாகிகள் ஏ.பாலதண்டபாணி, டபுள்யு.என்.கே.ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

    Next Story
    ×