என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிய விலை வழங்கக்கோரி உடுமலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
    X

    தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

    உரிய விலை வழங்கக்கோரி உடுமலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

    • தென்னை சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
    • விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    நீண்ட நாளைக்கு நிலைத்து நின்று நிரந்தர வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை விவசாயம் உடுமலைப் பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது. ஒரு சில விவசாயிகள் முழுவது மாகவும், பகுதி அளவும் தென்னை மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடை ப்பதில்லை.ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள்,தேங்காய் போடுதல், உரித்தல் ,உடைத்தல், சுமத்தல் என பல்வேறு பணிகளுக்கு கூலியும் உயர்ந்து உள்ளது. இதனால் தென்னை சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    மேலும் தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    இந்த சூழலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னை விவசாயிகளை காப்பாற்ற கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம் உடுமலையில் நடைபெற்றது.உடுமலை பொள்ளாச்சி நெடுஞ்சாலை யில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் சண்முகம் சிறப்புரை ஆற்றினார்.

    அதைத்தொடர்ந்து உரித்த தேங்காயை கிலோ ரூ.50 க்கு நேரடியாக கொள்முதல் செய்யுமாறும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140 க்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்கி ஆண்டு முழுவதும் கொப்ப ரையை கொள்முதல் செய்ய வேண்டும், ஏக்கருக்கு ஆண்டுக்கு 290 கிலோ கொள்முதல் செய்வதை 900 கிலோ அளவிற்கு உயர்த்த வேண்டும், ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும், தென்னை மரங்களை நோய் தாக்குதில் இருந்து காப்பாற்ற மானிய விலையில் மருந்துகள், நுண்ணூட்ட சத்துக்கள் வழங்க வேண்டும், சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை திருமூர்த்தி மலையில் உள்ள தென்னை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையத்திற்கு மாற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    Next Story
    ×