search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
    • சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் பகுதிகளில்மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்தினரால் மின் பணிகள் இரு தினங்கள் மேற்க்கொள்ளப்பட உள்ளதால் குடிநீர் இறைப்பு பணிகள் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தினங்கள் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்குட்பட்ட வார்டு 44, 45, 46, 47, 48, 49, 50, 51 & 56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் 15.12.2022 மற்றும் 16.12.2022 (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 17.12.2022 சனிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×