என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு - குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
- 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
குடிமங்கலம் :
குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அலுவலக செலவினங்கள், லிங்கமநாயக்கன்புதூர் முதல் சனுப்பட்டி வரையிலான ரோட்டை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் இல்லாததால், ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வினியோகத்தை சீராக்க வேண்டும்.கிராமங்களில் ரோடு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக கவுன்சிலர்கள் வழங்கிய கருத்துரு மீது ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஒன்றிய பொது நிதியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்