search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசிய காட்சி.

    குண்டடத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

    • தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அமைச்சர் பேசினர்.
    • அனைத்து பிரிவு தி.மு.கவினரும் திரளாக கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    குண்டடத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பேரூர் செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சாவடி அமைத்தல், தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பேசினர். இதில் குண்டடம் ஒன்றிய, பேரூர் உட்பட அனைத்து பிரிவு தி.மு.கவினரும் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×