என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியக்கோட்டை ஊராட்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

    பெரியக்கோட்டை ஊராட்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • சிவசக்தி காலனி குப்பை கிடங்கை உடனே அகற்ற வேண்டும் என்றனர்.
    • அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பெரியகோட்டை ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கே.ஜி., நகர் மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    சிவசக்தி காலனி குப்பை கிடங்கை உடனே அகற்ற வேண்டும் என்றனர். இதில் அதிமுக., ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர் ராஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×