என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் கோர்ட்டில் நண்பர்களுக்கு எதிராக சாட்சி அளித்தவருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்20 Oct 2023 10:32 AM GMT
- கோர்ட்டு வாசலிலேயே குற்றம் சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர்.
- வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர்.
திருப்பூர்:
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நண்பர்கள் பாலாஜி (வயது 26), விஷ்ணு(24), நரேந்திரன்(25). இவர்கள் மீது வேலம்பாளையம் போலீசில் அடி தடி வழக்கு உள்ளது.இந்த வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்-3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர். இதில், வழக்கு சம்பவம் தொடர்பாக மதன்குமார் என்பவர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராகி சாட்சி அளித்தார்.
அதன்பின், கோர்ட்டிலிருந்து வெளியே வந்த அவரை கோர்ட்டு வாசலிலேயே குற்றம்சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த மதன்குமார் இதுகுறித்து நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். வீரபாண்டி போலீசில் மிரட்டல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X