search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
    X

    கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    உடுமலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    • உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    உடுமலை :

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் விலைவாசி உயர்வை குறைத்திடவும், பெட்ரோல் டீசல் கியாஸ் விலையை பாதியாக குறைக்கவும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது , உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி., வரியை திரும்ப பெற வேண்டும், சிறு குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் , விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்திட வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடுமலை போலீசார் 181 பெண்கள் உட்பட 283 பேரை கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அனைவரும் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று தளி பகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 52 பெண்கள் உட்பட 130 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஜல்லிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் விடுவித்தனர். உடுமலை மற்றும் தளி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×