search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
    X

    திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, ஜோத்தியம்பட்டி ஊராட்சி, கொக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் நந்த வனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார். காங்கேயம் வட்டம் ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி வெங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டடத்தினையும், வெங்கிபாளையத்தில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீ ழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் ஜோத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், என மொத்தம் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    சூரிய நல்லூர் ஊராட்சி, வெங்கிபாளையம் நால்ரோடு பகுதியில் கலைஞர்மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியும், காங்கேயம் வட்டம், ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ்குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×