என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பாலம் கட்டும் பணியால் கொச்சுவேலி ரெயில் 2 நாட்கள் ரத்து
- ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது.
- .இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி நடப்பதால் வருகிற 23-ந்தேதி கொச்சுவேலி - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 16319) மறுமார்க்கமாக 24-ந்தேதி பெங்களூரு - கொச்சுவேலி ெரயில் (எண்:16320) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல் எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 12683) 24-ந்தேதியும், பெங்களூரு - எர்ணாகுளம் ெரயில் (எண்: 12684) மறுநாளும் ( 25-ந் தேதி) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story