என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆட்டோ டிரைவர் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக வீட்டு உரிமையாளர் கைது
Byமாலை மலர்13 Aug 2023 7:25 AM GMT
- வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார்.
- தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் இருந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவருடைய வீட்டில் ஆட்டோ டிரைவர் வீரமணிகண்டன் (34) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் வீரமணிகண்டன் இருந்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அவரிடம் வாடகை கேட்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வீரமணிகண்டன் கடந்த 1-ந் தேதி தீக்குளித்து இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் சிவக்குமாரை தெற்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X