search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி மங்கலம் வீரருக்கு பாராட்டு
    X

    இந்திய அணி வீரர் ஷாகுல்ஹமீதுக்கு ஜெயம் என்.மகேந்திரகுமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி மங்கலம் வீரருக்கு பாராட்டு

    • ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .
    • இறுதி போட்டியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

    மங்கலம் :

    நேபாள நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, அரியலூர் மாவட்டம் -சந்தோஷ்குமார், ஈரோடு மாவட்டம்-மணிவண்ணன் ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.பின்னர் நேபாள -இந்திய தொடரில் 2-வது போட்டியில் விளையாடிய திருப்பூர்- ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இறுதிவரை அவுட்டாகாமல் இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .

    . காத்மாண்டுவி்ல் நடந்த போட்டியின் இறுதியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியில் 15 பேர் இடம் பெற்ற நிலையில் 11பேர் விளையாடினர். இதில் திருப்பூர் ஷாகுல் ஹமீது,அரியலூர்-சந்தோஷ்குமார், ஈரோடு-மணிவண்ணன் ஆகியோர் இந்த தொடரில் சிறந்த வீரர்களுக்கான விருதையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் மாவட்டம், மங்கலம்அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய அணி வீரர் ஷாகுல்ஹமீது க்கு வி. ஜெயம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஜெயம் என்.மகேந்திரகுமார் சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×