என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பூலுவப்பட்டியில் அப்போலோ சர்க்கஸ் தொடக்கம்
- 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
- மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக ௩ காட்சிகள் நடைபெறுகிறது.
பெருமாநல்லூர்:
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டியில் அப்போலோ சர்க்கஸ் நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சர்க்கஸ் முதல் நாளிலே மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். இந்தியாவிலேயே மிகவும் பழமையானது அப்போலோ சர்க்கஸ். பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி உலக புகழ் பெற்றது. அந்தரத்தில் ஸ்கை டைவ் நிகழ்ச்சி, கலைஞர்களின் அணிவகுப்பு, 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இடையிடையே கோமாளிகளின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி குறித்து சர்க்கஸ் மேலாளர் பிரதீப் குமார் கூறியதாவது:- திருப்பூர் பி.என்.ரோடு பூலுபட்டியில் அப்போலோ சர்க்கஸ் தொடங்கப்பட்டுள்ளது . பல மாநிலங்களை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.
அந்தரத்தில் பார் விளையாட்டு, மரணம் கூண்டில் 3 பேர் பைக் சவாரி, கத்தி மேல் படுத்து சாகசம், நாவல் பல்டி , சீன கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற 12-க்கும் மேற்பட்ட மணிப்பூர் கலைஞர்களின் சேர் அக்ரோபேட், ஸ்டிக் ஜக்விங், ரோப் பேலன்ஸ், ஸ்பிரிங் நட் சாகசம் உள்பட 25 வகையான சாகச நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.
குழந்தைகளை மகிழ்விக்க கோமாளிகளின் தொகுப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தினமும் 3 காட்சிகளாக நடைபெறுகிறது. மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக நடைபெறுகிறது. டிக்கெட் கட்டணமாக முதல் வகுப்பு 200, இரண்டாம் வகுப்பு 150, மூன்றாம் வகுப்பு 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 96776 62229, 9790493242 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்