என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்.
பல்லடத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் 7 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் குழந்தைகள் வட்டார நல மையத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:- 1993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
5 ஆண்டு பணி முடித்த குறுமைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால், ஒரே ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. எனவே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் 7 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






