search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்லடம் அருகே கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியில் கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். முதலில் கோடங்கிப்பாளையம் கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இச்சிப்பட்டி குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒரு தரப்பினர், 'கல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இல்லை. கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும். குடும்ப வாழ்வாதாரத்துக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்' என்று பேசினார்கள். தொழிலாளர்கள் தரப்பினரும் தங்களுக்கு வேலை கிடைக்க குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

    மற்றொரு தரப்பினர் பேசும்போது, 'கனிமவள சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் குவாரிகள் உள்ளன. பசுமை வளையங்கள், கம்பி வேலிகள் குவாரியை சுற்றி அமைக்கவில்லை. அதனால் அனுமதிக்கக்கூடாது' என்றனர்.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் பேசும்போது, குவாரியில் இருந்து 300 மீட்டருக்குள் வீடுகள் உள்ளன. 50 மீட்டர் தூரத்துக்குள் வாய்க்கால் அமைந்துள்ளது. அதிகாரிகள் தெரிவித்த ஆவணங்களில் இவை தெளிவாக உள்ளது. ஆனால் விவரங்களை மறைத்து அனுமதி கோரியுள்ளனர். குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார். இருதரப்பு கருத்துக்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

    கலெக்டர் வினீத் பேசும்போது, அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும். கம்பி வேலி அமைப்பது அவசியம் என்றார்.

    Next Story
    ×