என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பார்த்தீனியத்தை களை எடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
- கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று.
- விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.
உடுமலை :
பார்த்தீனியம் களைச்செடியை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:- கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று. ஒருங்கிணைந்த களை மேலாண்மை வாயிலாக இதைக் கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இச்செடிகளின் அதிக வளர்ச்சி, பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுக்கும்.மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியத்தை அழிக்கும் என்பதால் அவற்றை பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.பூங்கா, தோட்டங்கள், புல் தரைகள் மற்றும் விவசாய நிலங்களில் பார்த்தீனியத்தை வேரோடு அகற்றுவது அவசியம். தொடர்ந்து பார்த்தீனியம் வளர்ந்தால், கட்டுப்படுத்த வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்