search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    வெள்ளகோவிலில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் பூத் கமிட்டி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தூரிலும், மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல் ஊராட்சிகளுக்கான கூட்டம் புஷ்பகிரியிலும், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிக்கான கூட்டம் வெள்ளகோவிலிலும் நடந்தது. இதற்கு திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வி.ஜெயராமன் பேசியதாவது:- காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்தும் மதத்தினருக்கும் பதவிகள் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தி தொகுதிகளை பலப்படுத்த வேண்டும்.

    உங்களால் தான் கழகம் வெற்றி பெற வேண்டும். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றியை தேடி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மேலிடப்பார்வையாளரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ். தாமோதரன் கலந்து கொண்டு ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.ஜி.கிஷோர்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஏ.எஸ்.முருகவேல், கே.ராஜலிங்கம், காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ். என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன், ஒன்றிய கழக பொருளாளர் வி.பி. சந்திரமோகன், நகர செயலாளர்கள் காங்கயம். வெங்கு என்கின்ற ஜீ.மணிமாறன், முத்தூர். ஜி.முத்துக்குமார், வெள்ளகோவில் டீலக்ஸ் ஆர். மணி, முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் கே.கண்ணுசாமி, இளைஞரணி செயலாளர் சி.கண்ணுசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×