என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து

    • செவந்தாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • கேந்திர வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா.இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகன் ரக்ஷன்பிரணவ் (வயது 17). இவர் சூலூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்ல தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பல்லடம் சாலை வரை சென்று அங்கிருந்து பள்ளி வாகனத்தில் செல்கிறார்.

    இன்று காலை வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்ட ரக்ஷன்பிரணவ் செவந்தாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் லாரி ஓட்டுநர் புஷ்பராஜை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×