search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேட்பாரற்று கிடக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கல் தொட்டி
    X

    கோப்புபடம்.

    கேட்பாரற்று கிடக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கல் தொட்டி

    • பழமையான கல்தொட்டி அரை அடி ஆழம், 7 அடி நீளம் மற்றும் மூன்றடி அகலம் என மிகவும் பழமை வாய்ந்தது.
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் உடல்களை வைத்து சடங்குகள் செய்ய இதனை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புளியம்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:-

    பல்லடம் வட்டாரத்தில் பழமையான கல்வெட்டுகள், சிலைகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து வருகிறோம்.

    புளியம்பட்டி கிராமத்தில் கண்டறியப்பட்ட பழமையான கல்தொட்டி அரை அடி ஆழம், 7 அடி நீளம் மற்றும் மூன்றடி அகலம் என மிகவும் பழமை வாய்ந்தது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர், இறந்தவர் உடல்களை வைத்து சடங்குகள் செய்ய இதனை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. உடல்களை வைப்பதற்கு வசதியாக, தொட்டியின் தலை பகுதி உயரமாகவும், கீழ் பகுதி பள்ளமாகவும் உள்ளது.கால்நடை தொட்டியாக இருந்தால் 3 அடிக்கு மேல் ஆழம் இருக்கும்.

    எனவே இது உடல்களை வைக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இத்தொட்டியில் உடல்களை வைத்து சடங்குகள் செய்வதால் இறந்தவர் சொர்க்கத்திற்கு செல்வர் என்ற ஐதீகம் இருந்ததை வரலாறு கூறுகிறது. இதேபோல், இன்னொரு கல் தொட்டி நெகமம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ளது.இக்கல் தொட்டியை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் கேட்பாரற்று கிடப்பது கவலை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×