என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X
    கோப்புபடம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    • பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாயார் லதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    ஈரோடு அருகே உள்ள நாராயணன் வலசு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் சந்தானமுருகன் (வயது 30). இவர் பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கரடிவாவியிலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்தான முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் லதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×